செய்திகள்

கொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம்

Published On 2018-09-01 09:06 GMT   |   Update On 2018-09-01 09:06 GMT
கொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சமபவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:

கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் செரீப். கூலி தொழிலாளி. இவருடைய மகன் ரியாஸ் (10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.

நேற்று இரவு செரீப் வீட்டில் மின்சாரம் இல்லை. எனவே அருகில் உள்ள வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து இருந்தனர்.

இன்று காலை சிறுவன் ரியாஸ் வீட்டில் இருந்த தனது சைக்கிளை எடுத்தாள். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து வந்த மின்சார வயரில் எதிர்பாராத விதமாக கைப்பட்டதால் மின்சாரம் தாக்கியது.

சிறுவன் ரியாஸ் அலறியபடியே கீழே விழுந்தான். சத்தம் கேட்டு அவனை காப்பாற்ற முயன்ற ரியாசின் தாயாருக்கும் காயம் ஏற்பட்டது.

மின்சாரம் தாக்கிய சிறுவன் ரியாசை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ரியாஸ் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News