செய்திகள்

உத்திரமேரூர் அருகே விவசாய பண்ணை குடோனில் ரூ. 4 லட்சம் குட்கா பறிமுதல்

Published On 2018-09-01 06:37 GMT   |   Update On 2018-09-01 06:37 GMT
உத்திரமேரூர் விவசாய பண்ணை குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம்:

உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் ஒன்றியத்தில் பேரணகாவூர் கிராமம் உள்ளது.

இங்கு இருக்கும் ஒரு விவசாய பண்ணைக்கு, அடிக்கடி வேன்கள் மற்றும் வாகனங்கள் வந்து போயின. இங்கிருந்து அட்டை பெட்டிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

இது குறித்து சாலவாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்தவிவசாய பண்ணை குடோனில், ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை திறந்து பார்த்த போது தடை செய்யப்பட்ட குட்கா பாக் கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம்.விசாரணையில், விவசாய பண்ணை குடோனில், குட்காவை பதுக்கி வைத்து விற்றவர் சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை தேடி போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உத்திரமேரூர் விவசாய பண்ணை குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News