செய்திகள்

நாகை மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை

Published On 2018-08-31 13:44 GMT   |   Update On 2018-08-31 13:44 GMT
நாகை மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமருகல்:

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் பருவமழை பெய்யாமல் வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திருமருகல், ஆதீனக்குடி, குருவாடி, அண்ணாமண்டபம், திருப் புகழுர், திருகண்ணபுரம், திருசெங்காட்டாங்குடி, சீயத்தமங்கை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்தமழை பெய்தது. 

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதேபோல் வேதாரண்யம் சீர்காழி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றுஇரவு மழை பெய்தது. இந்த மழை சம்பா நேரடி நெல்விதைப்பு செய்துள்ள விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
Tags:    

Similar News