செய்திகள்

திருமங்கலத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Published On 2018-08-31 12:05 GMT   |   Update On 2018-08-31 12:05 GMT
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 25) எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அப்போது 32 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காளி ராஜ், ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ் காரராக உள்ளார்.

இந்த நிலையில் திருமங் கலம் அனைத்து மகளிர் போலீசில் தேன்மொழி கொடுத்துள்ள புகாரில் கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வகுமாரி விசாரணை நடத்தி காளிராஜ், அவரது பெற்றோர் காளியப் பன்-ஈரக்கா, உறவினர் கள் சுந்தர், சுந்தரி, செல்லம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News