செய்திகள்

துரைப்பாக்கம் அருகே திருமண மண்டபத்தில் கோஷ்டி மோதல் - 15 பேர் கைது

Published On 2018-08-31 10:05 GMT   |   Update On 2018-08-31 10:05 GMT
துரைப்பாக்கம் அருகே திருமண மண்டபத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#arrest

திருவான்மியூர்:

துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு நீலாங்கரை வெட்டுவாங்கேணி கணேஷ் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது கண்ணகி நகரை சேர்ந்த 8 பேர் மண்டபத்தின் மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்தனர். பின்னர் மது பாட்டில்களை மொட்டை மாடியில் இருந்தபடியே ரோட்டில் வீசினார்கள். இதில் பாட்டில்கள் உடைந்து சிதறின.

இதை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த மணி கண்டன், சதீஷ் ஆகிய இருவரும் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களை 8 பேரும் சேர்ந்து மதுபாட்டிலால் தாக்கி அடித்து உதைத்தனர்.

இதையடுத்து இருவரும் ஊருக்குள் சென்று தங்களின் நண்பர்களை அழைத்து வந்தனர். அவர்கள் மண்டபத்துக்கு வந்து தேடிய போது 8 பேரையும் காணவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திருமண மண்டபத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது தொடர்பாக நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேஷ் நகரை சேர்ந்த மணிகண்டன், சதீஷ், தமிழ்மாறன், தமிழினியன் உள்பட 7 பேரையும், கண்ணகி நகரை சேர்ந்த ஜெகன், குட்டி, விமல், புகழேந்தி, அஜித்குமார், சந்துரு, மணி உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News