செய்திகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை

Published On 2018-08-30 20:23 GMT   |   Update On 2018-08-30 20:23 GMT
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்து குளிர்வித்தது. #Rain
சென்னை:

சென்னையில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் அதிகரித்து வந்தாலும், மாலை வேளைகளில் லேசான மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன.

சென்னையில் எழும்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #Rain
Tags:    

Similar News