செய்திகள்

லாரி மீது பைக் மோதல்- மனைவி கண் எதிரே கணவன் துடிதுடித்து பலி

Published On 2018-08-30 11:29 GMT   |   Update On 2018-08-30 11:29 GMT
லாரி மீது பைக் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்தார்.

தாடிக்கொம்பு:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 36). இவர் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் வந்தார்.

மீண்டும் ஒட்டன்சத்திரம் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர். தாடிக்கொம்பு அருகே உள்ள அழகு சமுத்திரப்பட்டியில் சென்று கொண்டு இருந்தபோது முன்னால் நின்று கொண்டு இருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.

இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி மடியிலேயே உயிரை விட்டார். இதைப்பார்த்ததும் அவர் கதறி துடித்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 வழிச்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக அந்த லாரி நின்றதும் அதன் மீது வேகமாக மோதியதுமே விபத்துக்கு காரணமாக அமைந்தது. மேலும் பைக்கை ஓட்டி வந்த கிருஷ்ணமூர்த்தி ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News