செய்திகள்
நீர்பிடிப்பு பகுதியில் மழை = பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
ஈரோடு:
பவானிசாகர் அணை இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. மழை ஓய்ந்து படிப்படியாக அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 3100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4273 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நேற்று ஈரோடு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. கோபியில் 3 மி.மீ., தாளவாடி-1, சத்தியமங்கலம்-4, கவுந்தப்பாடி- 8.6, மொடக்குறிச்சி-4, சென்னிமலை-7, கொடிவேரி அணை-4, வரட்டுப்பள்ளம் அணை-1.2, மி.மீட்டர் மழை பெய்தது.
பவானிசாகர் அணை இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. மழை ஓய்ந்து படிப்படியாக அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 3100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4273 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நேற்று ஈரோடு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. கோபியில் 3 மி.மீ., தாளவாடி-1, சத்தியமங்கலம்-4, கவுந்தப்பாடி- 8.6, மொடக்குறிச்சி-4, சென்னிமலை-7, கொடிவேரி அணை-4, வரட்டுப்பள்ளம் அணை-1.2, மி.மீட்டர் மழை பெய்தது.