செய்திகள்

வாலாஜாவில் கிணற்றில் தவறி விழுந்து 3-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2018-08-27 10:28 GMT   |   Update On 2018-08-27 10:28 GMT
வாலாஜாவில் கிணற்றை எட்டி பார்த்த 3-ம் வகுப்பு சிறுவன் தவறி விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

வாலாஜா அனந்தலை பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகள் அனு (வயது 10), மகன் ஆகாஷ் (8). இவர்களில் ஆகாஷ், அதே பகுதியில் உள்ள நிதியுதவிப் பெறும் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தான்.

இன்று காலையில் அக்காளுடன் ஆகாஷ், வீட்டருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றான். அப்போது, அங்குள்ள கிணற்றை எட்டி பார்த்த ஆகாஷ், தவறி கிணற்றுக்குள் விழுந்தான்.

இதில் தண்ணீரில் மூழ்கிய ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News