செய்திகள்
பெரம்பூரில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
பெரம்பூரில் பஸ்நிலையம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர்:
வியாசர்பாடி நேதாஜி தெருவில் கடந்த 15-நாட்களுக்கு மேல் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பெரம்பூர் பஸ்நிலையம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.