செய்திகள்

கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் கோர்ட்டில் தாக்கல்

Published On 2018-08-27 07:15 GMT   |   Update On 2018-08-27 07:15 GMT
அவதூறு வழக்கை முடித்து வைப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #Karunanidhideathcertificate #Karunanidhi
சென்னை:

முரசொலி பத்திரிகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி கடந்த 2015-ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார்.

4 ஆண்டு ஆட்சியில் ஜெயலலிதா சாதித்தது என்ன? என்ற தலைப்பில் எழுதிய அந்த கட்டுரையில் ஜெயலலிதா குறித்து சில விமர்சனங்களை செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது ஜெயலலிதா சென்னை மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதுபோல கருணாநிதி மீது ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல் 13 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி கருணாநிதி மரணமடைந்தார்.


இதையடுத்து அவர் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் கருணாநிதியின் வக்கீல் குமரேசன் மனு செய்தார். அதற்கு கருணாநிதியின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தபோது வக்கீல் குமரேசன் ஆஜராகி, கருணாநிதியின் இறப்பு சான்றிழை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருணாநிதி மீது நிலுவையில் உள்ள 13 அவதூறு வழக்குகளையும் வருகிற அக்டோபர் 1-ந்தேதி விசாரணைக்கு எடுப்பதாக கூறினார். அன்று அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #Karunanidhi
Tags:    

Similar News