செய்திகள்

ராஜபாளையம் அருகே லாரி மோதி முதியவர் பலி

Published On 2018-08-27 06:06 GMT   |   Update On 2018-08-27 06:06 GMT
ராஜபாளையம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் மேட்டுவடகரையைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது30). இவர் முரம்பில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். கருப்பசாமியின் தந்தை ஆறுமுகம் (58). இவர் சிமெண்டு கடை வியாபாரத்தை கவனித்து வந்தார்.

நேற்று மதியம் ஆறுமுகம் கடை அருகே ராஜபாளையம்- நெல்லை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஆறுமுகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.

உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News