செய்திகள்

திருவள்ளூரில் விபத்தில் வாலிபர் பலி - மாநகர பஸ்சுக்கு தீவைப்பு

Published On 2018-08-26 10:26 GMT   |   Update On 2018-08-26 10:26 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்றபோது மாநகர பஸ் மோதிய விபத்தில் வாலிபர் இறந்ததால் பொதுமக்கள் ஆத்திரத்தில் பஸ்சுக்கு தீவைத்தனர்.
செவ்வாப்பேட்டை:

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை அடுத்த உடையார் கோவில் காலனியைச் சேர்ந்தவர் பாரத். இவர் நேற்று இரவு வெள்ளவேடு இருங்காளி அம்மன் கோவில் அருகே சாலையை கடந்தபோது வெள்ளவேட்டில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் மோதியதில் அவர் இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும். பாரத்தின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் அங்கு திரண்டு வந்தனர். உடனே பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆத்திரத்தில் இருந்த பொது மக்கள் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.

அப்போது டிரைவர் இருக்கைக்கு சிலர் தீவைத்தனர். இதில் இருக்கை தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். இல்லையென்றால் தீ பஸ் முழுவதும் பரவி இருக்கும்.

பின்னர் பாரத் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Tags:    

Similar News