செய்திகள்

களக்காடு அருகே பெண்ணை தாக்கிய தாய்-மகளுக்கு வலைவீச்சு

Published On 2018-08-25 16:16 IST   |   Update On 2018-08-25 16:16:00 IST
களக்காடு அருகே பெண்ணை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரை சேர்ந்தவர் அருண்குமார் மனைவி இசைபிரியா (வயது 32). இவரது தம்பி ஸ்ரீதர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகளுக்கு போன் செய்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரனின் மனைவி சங்கரம்மாள் இதுபற்றி இசைபிரியாவிடம் தட்டி கேட்டார், இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவத்தன்று சங்கரம்மாள், அவரது மகள் தங்கம் ஆகியோர் இசைபிரியாவை கம்பால் தாக்கினர்.

இதில் காயமடைந்த இசைபிரியா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து சங்கரம்மாள் அவரது மகள் தங்கம் ஆகியோரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News