செய்திகள்

அய்யம்பேட்டை அருகே கார் மோதி கட்டிட ஒப்பந்ததாரர் பலி

Published On 2018-08-25 09:13 GMT   |   Update On 2018-08-25 09:13 GMT
அய்யம்பேட்டை அருகே கார் மோதி கட்டிட ஒப்பந்ததாரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யம்பேட்டை:

தஞ்சை தெற்கு மனோஜிப்பட்டி சோழன் நகரைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 48). கட்டிட ஒப்பந்ததாரர்.

இவர் தனது நண்பர் தஞ்சை மேல மானோஜிப் பட்டி சண்முகானந்தம் (53) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்திற்கு சென்று விட்டு மீண்டும் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை முருகையன் ஓட்டி வந்தார். இவர்கள் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் தாழமங்கை கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த கார் மோதியது.இதில் முருகையன், சண்முகானந்தம் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் இறந்து விட்டார்.சண்முகானந்தம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News