செய்திகள்

பெருந்துறை அருகே 10-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து பலி

Published On 2018-08-24 10:31 GMT   |   Update On 2018-08-24 10:31 GMT
பெருந்துறை அருகே மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மனவேதனையில் இருந்த 10-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜய மங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தசாமி.

இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அண்ணா நகர் புத்தூர் ஆகும். விஜயமங்கலத்தில் தங்கி கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

மகன் கோகுல கிருஷ்ணன் (வயது 15) விஜயமங்கலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பரீட்சையில் இவன் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் கோகுல கிருஷ்ணன் வேதனையில் இருந்துள்ளான்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு 10 மணிக்கு மாணவன் கோகுல கிருஷ்ணன் தனது வீட்டில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து விட்டான்.

உடல் முழுவதும் கருகிய அவனை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு கோவிந்தசாமி தனது சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக மகனை சேர்த்தார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவன் கோகுல கிருஷ்ணன் இறந்து விட்டான்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News