செய்திகள்

தேவர்குளத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம்

Published On 2018-08-23 13:00 GMT   |   Update On 2018-08-23 13:00 GMT
சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் வெற்றி விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி முருகன் வரவேற்றார். 

இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வது, கருணாநிதி உயிரிழந்த செய்தி கேட்டு மரணமடைந்த தி.மு.க. தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வது, தி.மு.க.வை வழி நடத்த செயல் தலைவர் ஸ்டாலின் தலைவராக வேண்டும். 

வருகிற 26-ந்தேதி நெல்லையில் நடக்கும் தலைவர் நினைவேந்தல் கூட்டத்திற்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சார்பில் 25 வாகனங்களில் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் காசிப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், ராமசந்திரன், விவேகானந்தன், சரவணன், அய்யப்பன், சுகுமார் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News