செய்திகள்

நிலக்கோட்டை அருகே விபரீதம்- மின் வயர்களை பழுது பார்க்கும் கிராம இளைஞர்கள்

Published On 2018-08-23 11:49 GMT   |   Update On 2018-08-23 11:49 GMT
நிலக்கோட்டை அருகே மின் வயர்களை கிராம இளைஞர்களே பழுது பார்ப்பதால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் ராயப்பன்பட்டி, கோட்டூர், செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு மின் கம்பங்கள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பங்களில் பழுது ஏற்பட்டால் மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பழுது நீக்க வராமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.

எனவே வேறு வழியின்றி இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கி வருகின்றனர்.

எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கம்பத்தில் ஏறி மின் வயர்களில் பழுது நீக்குகின்றனர். இவ்வாறான சமயங்களில் திடீரென மின் இணைப்பு கொடுக்கப்பட்டால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கம்பங்களில் இருந்து கீழே தவறி விழும் நிலையும் உள்ளது. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதிக்கு மின் வாரிய ஊழியர்கள் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆபத்தான முறையில் கம்பங்களில் ஏறும் இளைஞர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News