செய்திகள்
கொ.ம.தே.க. சார்பில் கேரளாவிற்கு நிவாரண உதவி
வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை:
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகரம் மேற்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை மேற்கு மாநகர தலைவர் சுபாஷ், மாநகர செயலாளர் சங்கனூர் பிரேம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மேற்கு மாநகர இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் கேபிள் சீனு, பகுதி செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் வேலு கவுண்டர், வர்த்தக அணி துணை செயலாளர் கோவிந்தராஜ், நல்லாம்பாளையம் மனோகர், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகரம் மேற்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை மேற்கு மாநகர தலைவர் சுபாஷ், மாநகர செயலாளர் சங்கனூர் பிரேம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மேற்கு மாநகர இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் கேபிள் சீனு, பகுதி செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் வேலு கவுண்டர், வர்த்தக அணி துணை செயலாளர் கோவிந்தராஜ், நல்லாம்பாளையம் மனோகர், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.