செய்திகள்

கூடுவாஞ்சேரியில் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-08-23 09:25 GMT   |   Update On 2018-08-23 09:25 GMT
கூடுவாஞ்சேரியில் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:

கூடுவாஞ்சேரி, ரெயில்வே சாலையில் வசித்து வந்தவர் கலைவாணன்.

தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைவாணனுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால் அவர் மன வேதனையில் இருந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் கலைவாணனுக்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரித்ததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலைவாணன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News