செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை - பணம் திருட்டு

Published On 2018-08-22 16:25 GMT   |   Update On 2018-08-22 16:25 GMT
அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அரியலூர்:

அரியலூர் தெற்கு எடத்தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவரது வீட்டின் அருகிலேயே இவரது மாமியார் பழனியம்மாள் (வயது 54) வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் பழனியம்மாள் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை தனது வீட்டின் முன்புறத்தில் மறைத்து வைத்து விட்டு, அருகில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News