செய்திகள்

தத்தனூர் மீனாட்சி கல்லூரி மாணவர்களுக்கு கைப்பந்து போட்டிக்கு பயிற்சி

Published On 2018-08-22 18:22 IST   |   Update On 2018-08-22 18:22:00 IST
அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு, பயிற்சியாளர்கள் மூலம் 30 நாட்களாக கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்து போட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள கோவிலூர் ஆண்டவர் உடற்கல்வியியல் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு, பயிற்சியாளர்கள் பேராசிரியர் திருமுருகன், அமர்நாத், அன்பரசன், பிரேம்குமார் ஆகியோர் கடந்த 30 நாட்களாக கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளித்தனர்.

இதை தொடர்ந்து போட்டியில் பங்கு பெறும் 16 மாணவர்களுக்கும் கல்லூரி தாளாளர் ரகுநாதன் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தென்னிந்திய அளவில் நடைபெறவுள்ள பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். #tamilnews
Tags:    

Similar News