செய்திகள்

அந்தியூர் அருகே பிளஸ்-2 மாணவன் மாயம்

Published On 2018-08-22 09:22 GMT   |   Update On 2018-08-22 09:22 GMT
அந்தியூர் அருகே பிளஸ்-2 மாணவன் மாயமான சம்பவம் குறித்து போசலீசார் விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வெள்ளையம் பாளையத்தை சேர்ந்தவர், தங்கவேல், கூலி வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் தமிழரசன் (வயது 17). இவர் அந்தியூர் அரசுபள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்வீட்டிற்கு வரவே இல்லை.

இதனால் பெற்றோர் நண்பர்கள்,உறவினர்கள் வீட்டில் தேடியும் தமிழரசன் கிடைக்கவில்லை.அதனால் தமிழரசனின் தந்தை தங்க வேல் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் போரில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை தேடி வருகின்றனர்.

மேலும் என்ன காரணத்திற்காக வீட்டை விட்டு மாணவன் வெளியேறினார் என்று போசலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News