செய்திகள்
சர்வதேச கடல் உணவு கண்காட்சி: அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் பயணம்
20-வது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் செல்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. #MinisterJayakumar
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜப்பானில் 22-ந் தேதி முதல் 24-ந் தேதிவரை, 20-வது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) நடத்துகிறது.
இந்த கண்காட்சியில், மீன்வளத்துறை இயக்குனர் ஜி.எஸ்.சமீரான், ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோருடன் சென்று கலந்து கொள்வதற்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது.
இந்த பயணத்துக்கு ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும். அவர் சுற்றுலா செல்லும் இந்தக் காலகட்டம். அவரது பணிகாலமாக கருதப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜப்பானில் 22-ந் தேதி முதல் 24-ந் தேதிவரை, 20-வது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) நடத்துகிறது.
இந்த கண்காட்சியில், மீன்வளத்துறை இயக்குனர் ஜி.எஸ்.சமீரான், ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோருடன் சென்று கலந்து கொள்வதற்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது.
இந்த பயணத்துக்கு ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும். அவர் சுற்றுலா செல்லும் இந்தக் காலகட்டம். அவரது பணிகாலமாக கருதப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.