செய்திகள்
வேலூர் பெண்ட்லெண்ட் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டம் செய்த காட்சி.

வேலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம்

Published On 2018-08-20 09:19 GMT   |   Update On 2018-08-20 09:19 GMT
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தரமோகன் முன்னிலை வகித்தார். ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சம்பள உயர்வுக்கோரி வேலூர் பெண்ட்லெண்ட் பழைய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் தர்ணா போராட்டம் செய்தனர். புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படதாபடி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெய கீதா, டாக்டர்கள் பிரகாஷ் அய்யப்பன், சதீஷ், சந்தோஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News