செய்திகள்

கருப்பு பணம் தடுப்பு வழக்கு- நளினி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு குற்றப்பத்திரிகை நகல்

Published On 2018-08-20 06:57 GMT   |   Update On 2018-08-20 06:57 GMT
வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நளினி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. #NaliniChidambaram #Srinidhi
சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடிக்கும் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

இதையடுத்து அவர்கள் மீது கருப்புப்பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.


இந்த வழக்கு நீதிபதி மலர்விழி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் மட்டும் ஆஜராகினர். இதையடுத்து அவர்களுக்கு, வழக்கில் வருமான வரித்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஆவணங்களின், குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #NaliniChidambaram  #Srinidhi
Tags:    

Similar News