செய்திகள்

கண்டமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2018-08-18 15:58 IST   |   Update On 2018-08-18 15:58:00 IST
கண்டமங்கலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கண்டமங்கலம்:

கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு சின்ன காலனியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 45) விவசாயி. இவர் நேற்று இரவு திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பழனியாண்டி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பழனியாண்டிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த பழனியாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
Tags:    

Similar News