செய்திகள்

கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை

Published On 2018-08-17 09:29 GMT   |   Update On 2018-08-17 09:29 GMT
கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

திண்டுக்கல்:

கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. கன மழை மற்றும் போக்குவரத்து துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் கொடைக்கானலுக்கு வர பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாகவே சாரல் மழை தொடர்ந்து வருகிறது. மேலும் பலத்த காற்று வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை, தூண்பாறை, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

குறைந்த அளவே வந்திருந்த சுற்றுலா பயணிகளும் அறைகளிலேயே முடங்கி உள்ளனர். வழக்கத்தை விட குளிர் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இயல்பு நிலை திரும்பிய பிறகே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதனால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News