செய்திகள்
கடலூரில் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூரில் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
கடலூர்:
சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூர் அனைத்து கூட்டமைப்பு போக்குவரத்து கழக நிர்வாகிகள் சார்பில் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பின்னர் போக்குவரத்து கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நிர்வாகிகள் சி.ஐ.டி.யூ. பாஸ்கர், பாட்டாளி தொழிற் சங்கம் ஜெய்சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி கருணாநிதி, ம.தி.மு.க. மணிமாறன், தே.மு.தி.க. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூர் அனைத்து கூட்டமைப்பு போக்குவரத்து கழக நிர்வாகிகள் சார்பில் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பின்னர் போக்குவரத்து கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நிர்வாகிகள் சி.ஐ.டி.யூ. பாஸ்கர், பாட்டாளி தொழிற் சங்கம் ஜெய்சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி கருணாநிதி, ம.தி.மு.க. மணிமாறன், தே.மு.தி.க. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.