செய்திகள்

ஜலகண்டாபுரம் அருகே செம்மண் கடத்தல் - டிப்பர் லாரி பறிமுதல்

Published On 2018-08-14 12:15 GMT   |   Update On 2018-08-14 12:15 GMT
ஜலகண்டாபுரம் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை, கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ் பறிமுதல் செய்தார்.

நங்கவள்ளி:

ஜலகண்டாபுரம் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை, கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ் பறிமுதல் செய்தார்.

கனிம வளத்துறை துணை இயக்குநர் சுரேஷ் நேற்று இரவு ஜலகண்டாபுரம் பகுதியில், வாகன தனிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆவடத்தூர் கிராமம் குண்டத்துமேடு அருகில், செம்மண் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்றில் உரிய ஆவணங்கள் இல்லாமல், செம்மண் கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இந்த மண் எடப்பாடி தாலுகா ஆடையூரிலிந்து, தாரமங்கலம் கொண்டு செல்வதாக விசாரணையில் தெரிந்தது. லாரியுடன் மணலை பறிமுதல் செய்து ஜலகண்டாபுரம் போலீசில் துணை இயக்குநர் சுரேஷ் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News