செய்திகள்

விருத்தாசலம் அருகே மதுபாட்டில்கள் விற்றவர் கைது

Published On 2018-08-14 10:30 GMT   |   Update On 2018-08-14 10:30 GMT
விருத்தாசலம் அருகே மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சந்தனக்குப்பம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றுகொண்டிருந்த அதேப்பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(55) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News