செய்திகள்

திருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு

Published On 2018-08-14 03:20 GMT   |   Update On 2018-08-14 03:20 GMT
திருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். #DMDK
சென்னை:

தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தே.மு.தி.க.வின் தலைமை செயற்குழு கூட்டத்தில் செப்டம்பர் 16-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. தற்போது அந்த மாநாடு தள்ளிவைக்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK
Tags:    

Similar News