செய்திகள்
விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்க நகைகள்.

மலேசியாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.20 லட்சம் தங்க நகை கடத்தல்

Published On 2018-08-13 09:24 GMT   |   Update On 2018-08-13 09:24 GMT
மலேசியாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

மலேசியாவில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையில் 2 தங்க நகைகள் இருந்தன. அவரது சேலையில் 10 தங்க நகைகள் டிசைன்கள் போல வைத்து கடத்தி வந்தார். அந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் எடை 650 கிராம் ஆகும். அதன் மதிப்பு ரூ.20 லட்சம்.

அந்த பயணியிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் விமலேஷ்வரி என்றும் மலேசியாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News