செய்திகள்

வடமதுரை போலீசில் காதலியுடன் தஞ்சம் அடைந்த தொழிலாளி

Published On 2018-08-12 16:39 GMT   |   Update On 2018-08-12 16:39 GMT
வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதலியுடன் தொழிலாளி தஞ்சம் அடைந்தார்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே அய்யலூர் கொத்தமல்லி பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது25). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் ஜி.குரும்பபட்டி பள்ளத்துகளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் பிரியா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய ஜாதகம் பார்த்தனர்.

சில காலம் பொறுத்திருந்து பார்த்துக் கொள்ளலாம் என இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் மாரிமுத்து மற்றும் பிரியா இருவரும் அடிக்கடி சந்தித்ததால் காதல் ஏற்பட்டது.

எனவே இருவரும் திருமணம் செய்யமுடிவு செய்தனர். ஆனால் பெற்றோர்கள் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியேறினர்.

அய்யலூர் ஆத்து பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா இருவரது பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags:    

Similar News