செய்திகள்
பாப்பாகுடி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு வலைவீச்சு
குடித்து விட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை அரிவாளால் வெட்டினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள பி.இலந்தகுளத்தை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மனைவி திருத்துவகுமாரி (வயது 43). பிச்சையா தினசரி குடித்து விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பிச்சையா நேற்று தனது மனைவி திருத்துவக்குமாரியை சரமாரி அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டார். பலத்த காயம் அடைந்த திருத்துவக்குமாரியை பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர்களது மகன் ரூபன் பாப்பாகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிச்சையாவை தேடி வருகிறார்கள்.