செய்திகள்

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி

Published On 2018-08-11 11:45 GMT   |   Update On 2018-08-11 11:45 GMT
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய வித்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை

நாகை மாவட்டம், காடஞ்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 35). இவர் நேற்று பட்டுக்கோட்டையில் இருந்து  காடஞ்சேத்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  அவர் முத்துப்பேட்டை அருகே சென்று கொண்டிருக்கும் போது வேளாங்கண்ணியில் இருந்து வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா பலத்த காயம் அடைந்தார். 

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளையராஜா பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News