செய்திகள்

உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுப்பு- வாலிபர் மீது காதலி புகார்

Published On 2018-08-11 10:28 GMT   |   Update On 2018-08-11 10:28 GMT
கலவை அருகே உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது காதலி புகார் அளித்துள்ளார்.
ஆற்காடு:

ஆற்காடு அடுத்த கலவை பஜாரில் உள்ள ஒரு துணிக்கடையில் 18 வயது இளம்பெண்ணும், 22 வயது வாலிபரும் ஒன்றாக வேலை செய்தனர். அப்போது, 2 பேரும் நெருங்கி பழகியதால் காதல் மலர்ந்தது. 3 மாதம் மட்டுமே காதலித்த அந்த வாலிபரின் ஆசைக்கு அந்த இளம்பெண் இணங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை அந்த வாலிபர் தனிமையில் அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார்.

இதையடுத்து, இளம் பெண்ணுடன் பேசுவதை வாலிபர் முற்றிலும் தவிர்த்தார். வருத்தமடைந்த காதலி, திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார். திருமணத்திற்கு வாலிபர் ஒத்துக் கொள்ளவில்லை. இதுப்பற்றி கலவை போலீசில் காதலன் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News