செய்திகள்

திருக்கோவிலூர் அருகே கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2018-08-10 10:00 GMT   |   Update On 2018-08-10 10:00 GMT
கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூரை அடுத்துள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 38). இவர் சென்னையில்ல தங்கி கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

கடந்த 1 மாதமாக சொந்த ஊரில் இருந்து வந்த அசோக்குமார் அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் தீக்குளித்தார். இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிச் சென்று தீயில் எரிந்து கொண்டிருந்த அசோக்குமாரை காப்பாற்றி முதல் உதவி சிகிச்சைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உரியவரிடம் கொடுத்ததுடன், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News