செய்திகள்

வாணரப்பேட்டையில் ரோட்டில் நின்றவர்களை தாக்கியவர் கைது

Published On 2018-08-09 15:02 GMT   |   Update On 2018-08-09 15:02 GMT
வாணரப்பேட்டையில் ரோட்டில் நின்றவர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி:

வாணரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரை சேர்ந்தவர் முகமதுஷெரிப் (வயது 32). சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார் அப்போது வாணரப்பேட்டையை சேர்ந்த அசோக், தீனதயாளன் ஆகியோர் சேர்ந்து முகமதுஷெரீப்பை திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதேபோல் பெரியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (21) தேங்காய்த்திட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரையும் தீனதயாளன் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கினர்.

இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தீனதயாளனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News