செய்திகள்

திருச்சி பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

Published On 2018-08-09 11:56 GMT   |   Update On 2018-08-09 11:56 GMT
திருச்சியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்புநகர் 9-வது குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி மகேஷ்வரி (வயது 48). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார். திடீரென அவரின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பிடித்து இழுத்து பறிக்க முயன்றுள்ளார்.

இதனை சுதாரித்துக் கொண்ட அவர் செயினை பிடித்துக்கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார். இதனால் தான் சிக்கிக் கொள்வோம் என உணர்ந்த மர்ம நபர் செயினை விட்டு விட்டு அவரிடம் இருந்து தப்பி சென்றார்.

இது குறித்து மகேஷ்வரி ஈ.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News