செய்திகள்

திருப்பத்தூரில் அரசின் சாதனைகளை விளக்கி அ.தி.மு.க. சைக்கிள் பேரணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2018-08-06 11:22 GMT   |   Update On 2018-08-06 11:22 GMT
திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

தேவகோட்டையில் இருந்து புறப்பட்டு காரைக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் அமைச்சர் உதயகுமாருடன் சைக்கிளை ஓட்டி வந்தனர். இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணா சிலை அருகே அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், இந்த பேரணியால் எதிர்க்கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாயில் பல திட்டங்களை ஜெயலலிதாவைப்போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

17 மாதங்களில் 32 ஆயிரம் போராட்டங்களை கண்டு தளர்ந்து விடாமல் சோதனைகளை உடைத்தெறிந்து சாதனைகளாக மாற்றியுள்ளார் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், நகர செயலாளர் இப்ராகிம் ஷா, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன், சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News