செய்திகள்

தா.பழூர் அருகே பைக் விபத்தில் விவசாயி பலி

Published On 2018-08-05 16:42 GMT   |   Update On 2018-08-05 16:42 GMT
தா.பழூர் அருகே பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ மிக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாறன், விவசாயி. இவர் சம்பவத்தன்று ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மைத்துனர் மனைவியை பார்ப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - ஜெயங்கொண்டம் சாலை சூசையப்பர்பட்டினம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கல்லில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். 

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News