செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம்

Published On 2018-08-03 08:56 GMT   |   Update On 2018-08-03 08:56 GMT
நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், குடிநீர்வசதி, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவும், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மருத்துவக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News