செய்திகள்

திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2018-08-02 05:38 GMT   |   Update On 2018-08-02 05:38 GMT
திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AKBoseDeath #ThiruparankundramMLA #ADMK #MKStalinMourns
சென்னை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், மாரடைப்பு காரணமாக இன்றுஅதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சவி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.



இந்நிலையில், ஏ.கே.போஸ் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் குறிப்பில், ஏ.கே.போஸ் மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். #AKBoseDeath #ThiruparankundramMLA #ADMK #MKStalinMourns
Tags:    

Similar News