செய்திகள்

புதுவை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

Published On 2018-08-01 10:26 GMT   |   Update On 2018-08-01 10:26 GMT
கல்வி கட்டணத்தை குறைக்க கோரி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவை சுய்ப்ரேன் வீதியில் அரசு கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. 2-ம் ஆண்டு கல்வி கட்டணம் இந்த ஆண்டு முதல் ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.51 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளனர்.

இதனால் இந்த கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவர்கள் 50 பேர் இன்று வகுப்பை புறக்கணித்தனர். அவர்கள் கல்லூரி எதிரே உட்கார்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க பொறுப்பாளர் உதயன் தலைமை தாங்கினார். ருத்ரா, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அவர்கள் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை ரத்து வேண்டும், பழைய கல்வி கட்டணத்தை அமல்படுத்தி தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News