செய்திகள்
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி - தி.மு.க. அதிருப்தி
பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதித்திருப்பது தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், தி.மு.க. இடையில் கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியை தி.மு.க.வுக்கு அளிப்பதாக காங்கிரஸ் உறுதி அளித்திருந்தது. தி.மு.க.வில் இந்த பதவியை பெற பலரும் முயற்சித்து வந்தனர்.
இந்த நிலையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதித்திருப்பது தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தங்களுக்கு வழங்குவதாக கூறிய தி.மு.க. நியமன எம்.எல்.ஏ. பதவியை காலத்தோடு வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என தி.மு.க.வினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், தி.மு.க. இடையில் கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியை தி.மு.க.வுக்கு அளிப்பதாக காங்கிரஸ் உறுதி அளித்திருந்தது. தி.மு.க.வில் இந்த பதவியை பெற பலரும் முயற்சித்து வந்தனர்.
இந்த நிலையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதித்திருப்பது தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தங்களுக்கு வழங்குவதாக கூறிய தி.மு.க. நியமன எம்.எல்.ஏ. பதவியை காலத்தோடு வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என தி.மு.க.வினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.