செய்திகள்

போரூர் அருகே 5 மாடி கட்டிட பணியில் சாரம் சரிந்தது- 2 பேர் படுகாயம்

Published On 2018-07-31 09:43 GMT   |   Update On 2018-07-31 09:43 GMT
போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் 5 மாடி கட்டிட பணியில் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போரூர்:

போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் ராமச்சந்திர நகரில் 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று இரவு ஆந்திராவைச் சேர்ந்த ராமராவ், சிம்காசனம் மற்றும் தொழிலாளர்கள் கட்டிடத்தை சுற்றி சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முன்பக்கத்தில் இருந்த சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய ராமராவும், சிம்காசனமும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மற்ற தொழிலாளர்கள் மீட்டு போரூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிம்காசனம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News