செய்திகள்

பெரம்பலூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-30 12:11 GMT   |   Update On 2018-07-30 12:11 GMT
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், தமிழக அரசு அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், தமிழக அரசு அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, நல்ல தம்பி, மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், பாடாலூர் சோமு. மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் உட்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், நூருல்ஹிதா இஸ்மாயில், பாஸ்கர், ரவிச்சந்திரன், வக்கீல் மாரிக்கண்ணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் செந்தில் நாதன், மகாதேவி, ஹரிபாஸ்கர், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News