செய்திகள்

விசா முரண்பாடு - சென்னை வந்த சீன வாலிபருக்கு மறுப்பு

Published On 2018-07-29 09:21 GMT   |   Update On 2018-07-29 09:21 GMT
விசா முரண்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த சீன வாலிபர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆலந்தூர்:

சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு விமானத்தில் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் விசா மற்றும் பாஸ்போர்ட் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீனாவை சேர்ந்த ‌ஷயாங்க் என்ற வாலிபரின் ‘விசா’வில் முரண்பாடு இருந்தது. எனவே, அவர் அடுத்த விமானத்தில் மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த 10 சீன மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களுக்கான ‘விசா’வில் வராமல் சுற்றுலா ‘விசா’வில் அவர்கள் வந்த தாக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News