செய்திகள்

சங்கரன்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2018-07-28 08:52 GMT   |   Update On 2018-07-28 08:52 GMT
சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
சங்கரன்கோவில்:

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு முழுவதுமாக தடை செய்யப்பட இருக்கிறது. இதையொட்டி சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவின்படி, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், பிச்சையாபாஸ்கர், சக்திவேல், மாதவ ராஜ்குமார், கோவில்பட்டி முருகன், தென்காசி மாரிமுத்து, ராஜபாளையம் வேலுமணி மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், நகராட்சிப்பணியாளர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

சுவாமி சன்னதி தெரு, ராஜபாளையம் சாலை, மெயின்ரோடு, சாந்தி காம்ப்ளக்ஸ் பகுதி, ராஜபாளையம் ரோடு, திருவேங்கடம் சாலை, வடக்கு ரத வீதி, தெற்குரதவீதி ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. இதில் சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ.9500 அபராதம் விதிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News